Labels

Saturday, September 7, 2013

காக்கைகளை கவனித்துப் பாருங்க



                    காக்கைகளை கவனித்துப் பாருங்க
                                                                                

வானத்துப் பறவைகளைக் கவனித்துப் பாருங்க
அவை விதைக்கிறதும் இல்லை
அவை அறுக்கிறதும் இல்லை
பரம பிதா போஷிக்கிறார்!
எங்களை பரம பிதா போஷிக்கிறார்!!
                    காக்கைகளை கவனித்துப் பாருங்க

ஆகாயத்துப் பறவைகளைப் போஷிக்கும் தேவன்
உன்னையும் என்னையும் நடத்திடுவார் - (2)
கலங்காதே நீ கலங்காதே - (2)
உனக்காக யாவையும் செய்திடுவார்.
                                                                                                       காக்கைகளை கவனித்துப் பாருங்க
எதைக் குறித்தும் மகனே நீ கவலைப்படாதே
யேசப்பா எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் - (2)
நீதிமானின் சந்ததி என்றும்
அப்பத்திற்காக அலைந்து திரிவதேயில்லை
நீதிமானின் சந்ததி என்றும்
உதவிக்காக ஏங்கித் திரிவதே இல்லை
நீதிமானின் சந்ததி என்றும் - (2)
ஒரு நாளும் வெட்கப்பட்டுப் போனதே இல்லை.

                           காக்கைகளை கவனித்துப் பாருங்க

பறவைகளைக் காட்டிலும் நீ விஷேஷமானவன்
பரலோக பொக்கிஷத்தை உனக்குத் தருவார்
பயப்படாதே பயப்படாதே - (4)
எலியாவைப் போஷித்தவர் உன்னையும் போஷிப்பார்
யோசேப்பை நடத்தினவர், உன்னையும் நடத்துவார்.

                             காக்கைகளை கவனித்துப் பாருங்க

                                                               Photo Courtesy~Andrew

No comments:

Post a Comment